• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை நீலாங்​கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனை​வி​யும் கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டனர். இவர்​களுக்கு 15 வயதில் மகள் உள்​ளார்.

அந்த சிறுமி தனது அம்​மாவுடன் அந்​த​மானில் உள்ள தனது பாட்டி வீட்​டில் வசித்து வரு​கிறார். சமீபத்​தில் சிறுமி​யின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் அந்​த​மானில் உள்ளதனது மகளை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்​கக்​கோரி சென்​னை​யில் உள்ளசிறுமி​யின் தந்தை உயர்நீதி ​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *