
சென்னை: அந்தமானில் வசிக்கும் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்கக்கோரி தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்ற முதல் மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
அந்த சிறுமி தனது அம்மாவுடன் அந்தமானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சிறுமியின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தமானில் உள்ளதனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னையில் உள்ளசிறுமியின் தந்தை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.