
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்கால மாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதை செயல்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டை திரும்ப பெற்று, அரசாணையை வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்து 19 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்.