
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் டயர்கள் உராய்ந்து வழக்கத்தைவிட அதிகமாகப் புகை வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகுதிக்கு வந்து தரையிறங்கியது.
அப்போது விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் உராய்ந்து, வழக்கத்தைவிட அதிகமாகப் புகை வந்ததைப் பார்த்த ஓடுபாதை பராமரிப்பு அதிகாரிகள், டயர் உராய்ந்து தீப்பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.