
சென்னை: தனியார் நிறுவனம் வழங்கும் பணப்பலன் உறுதிசெய்யப்படும். எனவே தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப்பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 12 நாட்களாக ரிப்பன் மாளிகை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுடன் 12-க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.