
புதுடெல்லி: பாஜகவின் பிடியில் இருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிக்க ஒன்றிணைவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை அக்கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.