
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரை நிகழ்த்த உள்ளார். இதையடுத்து, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.