
அமராவதி: “ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதில்லை. ஏனெனில், ரேவந்த் ரெட்டி மூலமாக சந்திரபாபு நாயுடுவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார்” என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, “ ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஹாட்லைனில் தொடர்பில் இருக்கிறார். எனவே, ஆந்திரா பற்றி ராகுல் காந்தி பேசுவதில்லை. ஆகவே, ராகுல் காந்தியைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நேர்மையற்றவர் தானே?!" என்று கூறினார்.