• August 13, 2025
  • NewsEditor
  • 0

’நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருக்கிறது ஆச்சர்யம்தான்’ என்று ரஜினிகாந்த்தால் ‘கூலி’ பட இசைவெளியீட்டு விழாவில் பாராட்டப்பட்டவர் நடிகர் நாகார்ஜுனா.

அந்தளவிற்கு பிட்னஸ் உடன் இருக்கும் நாகார்ஜுனா, லோகேஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது நாகார்ஜுனா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகார்ஜுனா

வில்லன் கதாபாத்திரம்

“நான் இதுவரை நல்ல கேரக்ட்டர் உடைய கதாபாத்திரங்களைத்தான் தேர்வு செய்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் ஓகே சொல்லவில்லை.

அதனால் லோகேஷ் கனகராஜ் 7, 8 முறை சந்தித்து என்னிடம் பேசினார். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் பிறகு எனக்குக் கதாபாத்திரம் பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டேன்” என்று கூலி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நாகார்ஜுனா பேசியிருந்தார்.

40 வருட சினிமா பயணம்

கிட்டதட்ட அவரது 40 வருட சினிமா பயணத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை. முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் சினிமா பயணம் குறித்துப் பார்ப்போம். 

தெலுங்கு திரைப்பட ரசிகர்களால் ‘கிங்’ என்று அழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. 1959 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவரின் முழுப்பெயர் அக்கினேனி நாகார்ஜுனா ராவ். புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஷ்வர ராவ் அவர்களின் மகனான நாகார்ஜுனா சிறுவயதில் இருந்தே திரைப்பட சூழலில் வளர்ந்ததால், சினிமா மீது இயல்பாகவே ஈடுபாடு இருந்தது.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

1986-ல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நாகார்ஜுனா. அதற்கு முன்பு, 1967-ல் தந்தையின் படமான ‘சுதிகுந்த்லு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தொடர்ந்து அவரது நடிப்பில் ‘ஆஹரி போராட்டம்’, ‘ஜானகி ராமுடு’, ‘கீதாஞ்சலி’ போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும், அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெருகச் செய்த படம் ‘சிவா’. இந்தத் திரைப் படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். 

தேசிய விருதுகள்

தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு இந்தப் படம்  ஹிட்டானது. தவிர தமிழில் மணிரத்னத்தின் ‘கீதாஞ்சலி’ படம் மூலமாக அறிமுகமான நாகார்ஜுனா அந்தப் படத்திற்காகவும் தேசிய விருதைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அதன்பிறகு தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். 2000 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘சந்தோஷம்’, ‘மாஸ்’, ‘டான்’, ‘கிங்’ போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டார் அளவுக்கு தெலுங்கு சினிமாவில் உயர்த்தியது.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்த நாகார்ஜுனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தியுடன் இணைந்து தமிழில் ‘தோழா’ படத்தில் நடித்திருந்தார். 

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்த நாகார்ஜுனா இதுவரை இரண்டு தேசிய விருதுகளையும், ஆந்திரப் பிரதேச அரசின் 9 நந்தி விருதுகளையும், 3 ஃபிலிம் பேர் விருதுகளையும் வென்றிருக்கிறார்.   

படங்கள் தவிர்த்து பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். 

கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பயணிக்கும் நாகார்ஜுனா லவ், ஆக்ஷன் எனக் கிட்டதட்ட 90 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

தனது சினிமா பயணத்தில் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கும் நாகார்ஜுனா இந்த முறை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் அவருக்குக் கைகொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *