• August 13, 2025
  • NewsEditor
  • 0

ஜபல்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலம் ஜபல்​பூர் அரு​கில் உள்ள ஒரு வங்​கி​யில் பட்​டப்​பகலில் ஆயுதமேந்​திய கொள்​ளை​யர்​கள் ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர். மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலை​வில் உள்ள கிடோலா பகு​தி​யில் இசாஃப் ஸ்மால் ஃபை​னான்ஸ் வங்கி கிளை இயங்கி வருகிறது.

இந்​நிலை​யில் நேற்று காலை 11 மணி​யள​வில் 6 கொள்​ளை​யர்​கள் 3 மோட்​டார் சைக்​கிள்​களில் இந்த வங்​கிக்கு வந்​தனர். இவர்​களில் 4 பேர் முகத்தை மறைப்​ப​தற்​காக ஹெல்​மெட் அணிந்து கொண்டு வங்​கிக்​குள் நுழைந்​துள்​ளனர். பிறகு துப்​பாக்கி முனை​யில் வங்கி ஊழியர்​களை மிரட்டி ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை கொள்​ளை​யடித்​துக் கொண்டு சில நிமிடங்​களில் தப்​பிச் சென்று விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *