• August 13, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் 2 உதவி ஆணையாளர்கள், வரிவிதிப்புக் குழு தலைவர் உள்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை அவரை 6.30 மணிக்கு மதுரை அழைத்து வந்த போலீஸார், நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி, படபடப்பு இருப்பதாகவும், மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தமும் இருப்பதாக கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *