• August 13, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை மாவட்​டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் ஏராள​மான பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​கள் வைக்​கப்​படு​கின்​றன. எந்த அனு​ம​தி​யும் பெறாமல் வைக்​கப்​படும் போர்​டு​களால், போக்​கு​வரத்து நெரிசல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன.

பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற வேண்​டியது அதி​காரி​களின் கடமை​யாகும். ஆனால், அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தில்​லை. எனவே, அனு​மதி பெறாமல் பொதுப்​பாதைகள், நடை​பாதைகள் மற்​றும் சாலை​யோரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள் உள்​ளிட்​ட​வற்றை அகற்​ற​வும், அவற்றை வைத்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *