
மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகள் சார்பில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுகின்றன. எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்படும் போர்டுகளால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, அனுமதி பெறாமல் பொதுப்பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.