
பழநி: பழநி அருகே நேற்று நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப் பாய்ந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள கொழுமங்கொண்டான் கிராமத்தில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் அர.சக்கரபாணி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெரிய காளைகள், சிறிய காளைகள் என 2 வகைகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.