• August 13, 2025
  • NewsEditor
  • 0

திருப்​பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகளை வைக்​கத் திட்டமிட்டுள்​ள​தாக இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கூறி​னார். இது தொடர்​பாக திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி தமிழ்​நாட்​டில் ஒன்​றரை லட்​சம் இடங்களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த ஆண்டு 15 லட்​சம் வீடு​களில் அரை அடி முதல் ஒரு அடி வரையி​லான விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்​டன. இந்த ஆண்டு அதை​விட அதிக எண்​ணிக்​கை​யில் சிலைகள் வைக்கப்படும்.

சென்​னை​யில் மட்​டும் 5,500 இடங்​களில் விநாயகர் சிலைகள் வைக்​கப்பட உள்​ளன. திருப்​பூர் மாவட்​டம் முழு​வதும் 6 ஆயிரம் இடங்​களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு செய்து வரு​கிறோம். திருப்​பூரில் நடை​பெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்​வலத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நடிகை கஸ்​தூரி, கோவை​யில் பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, இயக்குநர்கள் பேரரசு, மோகன்​கு​மார், நடிகர் ரஞ்​சித் உள்​ளிட்​டோர் பங்​கேற்க உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *