
சென்னை: சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகமும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5-வது மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்கான ரூ. 276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.