
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழிலதிபரும் கவுரவ தூதருமான அட்னன் ஆசாத் அசிம் முனீருக்கு நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார்.
அந்நிகழ்ச்சியில் முனீர் பேசியதாவது: சிந்து நதி நீர் இந்தியாவின் சொத்து அல்ல. அந்த நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா அணை கட்டினால், அதை ஏவுகணைகள் மூலம் தகர்ப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. வருங்காலத்தில் இந்தியாவுடன் போர் மூண்டு, அதில் நாங்கள் வீழ்ச்சி அடைகிறோம் என்று நினைத்தால், உலகின் பாதியையும் அழித்துவிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.