• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் பிறகு பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறை​யாக அமெரிக்கா சென்​றுள்​ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழில​திபரும் கவுரவ தூதரு​மான அட்​னன் ஆசாத் அசிம் முனீருக்கு நேற்று முன்​தினம் இரவு விருந்து அளித்​தார்.

அந்நிகழ்ச்​சி​யில் முனீர் பேசி​ய​தாவது: சிந்து நதி நீர் இந்​தி​யா​வின் சொத்து அல்ல. அந்த நதியி​லிருந்து பாகிஸ்​தானுக்கு வரும் தண்​ணீரை தடுத்து நிறுத்த இந்​தியா அணை கட்​டி​னால், அதை ஏவு​கணை​கள் மூலம் தகர்ப்​போம். நாங்​கள் ஒரு அணு ஆயுத நாடு. வருங்​காலத்​தில் இந்​தி​யா​வுடன் போர் மூண்​டு, அதில் நாங்​கள் வீழ்ச்சி அடைகிறோம் என்று நினைத்​தால், உலகின் பாதி​யை​யும் அழித்​து​விடு​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *