• August 12, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: தாயுமானவர் திட்டம் மூலம் வீடுகளுக்கேச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி, இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலத்தில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. தேமுதிக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய காந்த், தேமுதிக பொருளாளர் சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் மோகன்ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *