• August 12, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

சிவகாசியில் உள்ள இரு பிரபல பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து வட மாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் இரு ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பட்டாசு விற்பனை, வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரித்த வருமான வரித் துறையினர், அது குறித்து உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் விசாரணையில் நடத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *