
புதுடெல்லி: டெல்லியில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு தெருநாய்கள் கடித்ததாக புகார்கள் பதிவாகி உள்ளன. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. அதனையொட்டி, டெல்லி மாநகராட்சி சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. டெல்லியில் மட்டும் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, தெருநாய் தொல்லைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு பிரத்யேக ஹெல்ப்லைனை நம்பரை டெல்லி மாநகராட்சி துவங்க உள்ளது.