• August 12, 2025
  • NewsEditor
  • 0

‘எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்’ என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின்.

அவர், “ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். அதனால், அவருக்கு குதிரைப் பேரம் பழகியிருக்கும்.

தவறான அமைதி ஒப்பந்தம் போரைத் தொடங்கும் என்பது அவருக்கு புரியவில்லை. அவருக்கு நோபல் பரிசு வெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் இருக்கிறது.

அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு அசிம் முனீர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.

அசிம் முனீர்

ஒசாமா பின்லேடன்…

அசிம் முனீரைப் பார்க்கும்போது, ஒசாமா பின்லேடன் கோட் சூட் அணிந்திருப்பதுப்போலத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அவர்களது கருத்தியலையோ, பிரதிநிதித்துவப்படுத்தலையோ மாற்றப்போவதில்லை.

பாகிஸ்தான் பாதி உலகை அணு ஆயுதங்களைக் கொண்டு பயமுறுத்தும்போதே, அது ஒரு முறையான நாட்டிற்கான உரிமையை இழந்துவிட்டது என்பது தெரிகிறது.

அமெரிக்கா பிற கொள்கைகளைக் கையிலெடுக்கும் நேரம் இது. அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதன் அணு ஆயுதத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால், அது பயங்கரமான விளைவுகளைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *