
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கும் நோக்கில் அரசியலமைப்பு திருத்த (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.