
மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.
தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை அருகே பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேடையிலிருந்து தொண்டர்களிடையே நடந்து செல்லும் விதமாக 1,000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.