• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்​திரன் என்​பது போல ஒரு எம்​ஜிஆர், ஒரு ஜெயலலி​தா, ஒரு கருணாநி​தி, ஒரு விஜய​காந்த் தான் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக பொருளாள​ரும், பிரேமல​தா​வின் சகோ​தரரு​மான எல்​.கே.சுதீஷ் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுடன் பிரேமலதா இருப்​பது போன்ற புகைப்​படத்தை பதி​விட்​டுள்​ளார்.

இந்த பதிவை தொடர்ந்து அதி​முக கூட்​ட​ணிக்கு தேமு​திக செல்​லப் போகிறதா என்ற விவாதங்​கள் எழுந்​தன. இந்​நிலை​யில், முன்னாள் முதல்​வர் ஜெயலலிதா போல ஒரு கட்சி பொதுச்​செய​லா​ள​ராக அரசி​யலில் சிங்க பெண்​ணாக தனது சகோ​தரி இருக்கிறார் என்​பதை குறிப்​பிட்டே அவர் பதி​விட்​டுள்​ள​தாக பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை வளாக நுழை​வாயி​லில் நடை​பெற்று வரும் தூய்மை பணி​யாளர்​களின் போராட்​டத்​திற்கு நேற்று தேமு​திக பொதுச்​செயலா​ளர் பிரேமலதா நேரில் சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *