
ஸ்ரீநகர்: ஜம்மு மாகாணத்தின் கிஷ்த்வார் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாகிஸ்தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பகுதி 2021 வரை தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது பெரிய தீவிரவாத சம்பவங்கள் மற்றும் என்கவுன்ட்டர் நடைபெறும் முக்கிய தளமாக மாறிவிட்டது.
இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.