
சென்னை: தமிழகத்தில் கார், ஆட்டோ, பைக் டாக்ஸி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. தமிழகத்தில் தற்போது பயணிகள் மற்றும் வாடகை வாகனத்தினர் இடையே ஒருங்கிணைப்பாளர்களுக்கான எந்தவொரு முறையான கட்டமைப்பும் இல்லை.
குறிப்பாக, பைக் டாக்ஸிகள், தெளிவான கட்டண விதிகள், பாதுகாப்பு அம்சங்கள் அல்லது குறைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் என எதுவுமின்றி ஒரு சட்டபூர்வமற்ற நிலையில் இயங்கி வருகின்றன.