
பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்துக்கொண்டு, வாக்குகளை திருடியுள்ளது. பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன'' என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா, ‘‘வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்கிரஸார் வெட்கப்பட வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் நாம் தடுக்க‌வில்லை? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது நாம் ஆட்சேபம் தெரிவித்திருந்தால், இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும்'' என்றார்.