• August 12, 2025
  • NewsEditor
  • 0

“அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்” என்று அவரின் ஜெயந்தி விழாவில் ஹரிஹர முத்தையர் நெகிழ்ச்சியோடு பேசினார்.

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி

முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள மகா பெரியவா கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இந்த ஜெயந்தி நிகழ்வில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

ஜெயந்திரரின் படத்துகக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செய்த தமிழ்நாடு பிராமண சேவா சமாஜத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையர் பேசும்போது, “அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஜன கல்யாண் என்கிற அமைப்பை நிறுவி பல்வேறு பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர். அதிலும் குறிப்பாக மிகவும் அடித்தட்டில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ஜெயந்திரர் ஜெயந்தி

இன்று அயோத்தியில் நாம் ஸ்ரீ ராமரை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அதற்காக அன்றே உழைத்தவர், அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவதுதான் நாம் அவரது ஜெயந்தி நாளில் அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *