
மதுரை: சட்டவிரோத வருவாயை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவே கனிம வளத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாற்றுத் திறனாளியான நான், 2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராகச் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் உதவி இயக்குநராக பொறுப்பேற்றார்.