
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்கள் கணேசன், மணிகண்டன் ஆகியோர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்கல் செய்திருந்தனர்.