
சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய 4 ரயில் நிலையங்களை அடுத்த 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 15 நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.