• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை இன்று குப்பை போல வீசுகிறார்கள். எங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். ஓட்டு வாங்கியதற்குப் பிறகு வாக்கு மாறிவிடுமா?” என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கொந்தளிப்புடன் கூறினர்.

இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறும்போது, “நிரந்தரப் பணி வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. முன்னர், எங்களை கையெடுத்து கும்பிட்டார்கள், காலில் விழுந்து கும்பிட்டார்கள். நாங்கள்தான் பெரிய ஆளு என்று தெரிவித்தனர். ஆனால், இப்போது நாங்கள் குப்பைக்காரர்கள் ஆகிவிட்டோம். மேயர் பிரியாவும் எங்களைப் போன்ற ஒரு பெண்தானே. அவருக்கு எங்களின் கஷ்டம் தெரியாதா? அமைச்சர் சேகர்பாபு வருகிறார், பேட்டி கொடுக்கிறார் அவ்வளவுதான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *