
சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும் என்று தனது படம் குறித்து தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.
வெங்கட்பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான கதை மற்றும் திரைக்கதையை இறுதிச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அப்பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், சிவகார்த்திகேயனுக்கு கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.