
புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிமர் முனீர், அந்நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் வாஷிங்டனில் உரையாற்றினார். அப்போது, இந்தியா உடனான எதிர்கால போரில் பாகிஸ்தானின் இருத்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார். நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால் எங்களுடன் சேர்ந்து உலகத்தின் பாதியை வீழ்த்துவோம் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.