
பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயிலின் மஞ்சள் பாதையையும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஐடி ஊழியர்களும் ஓசூர் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அங்கிருந்து பெங்களூரு கெம்பேகவுடா ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, அஜ்னி (நாக்பூர்)-புனே ஆகிய 3 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.