
சென்னை: அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகளே முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் காணொலி வாயிலாக பங்கேற்று முதல்வர் பேசியதாவது: கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படும் ஆயுதமாவோ இல்லாமல் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.