• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் 3-வது சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 87,227 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய 92,605 இடங்களுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க ஒரு லட்சத்து 1,589 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *