
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர்.