• August 10, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இன்று (ஆக.10) செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் உள்ள இரண்டு வாக்காளர் அட்டையை அவர் காண்பித்தார். அதில் விஜய் குமார் சின்ஹாவுக்கு பாட்னாவில் உள்ள பங்கிபூர் மற்றும் லக்கிஸராய் தொகுதியில் வாக்காளர் அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். இது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு வெளியான வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *