
திருச்சி: புளியஞ்சோலை சுற்றுலா தளம் பகுதியில் கரடி உலா வருவதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று காலை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில், கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை சூழல் சுற்றுலா தளம் இயங்கி வருகிறது. சுற்றுலா தளம் அமைந்துள்ள தரைப்பகுதி திருச்சி மாவட்ட எல்லையிலும், சுற்றுலா தளத்திற்கு மேல் மலைப்பகுதி நாமக்கல் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.-