
பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆண்டுகளாக அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுற்று வரும் பொது மக்கள் வெங்கல் ஊராட்சியில் புதிய துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை கிராமத்தில் பெரியபாளையம் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 40 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.