
புதுடெல்லி: இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு நாடுகள் மீது அதிக அளவிலான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்து வருகிறார். தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.