
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
நேற்று மீண்டும் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தனர். அங்கு இரு தரப்பினர் இடையே நேற்று 9-வது நாளாக துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றது.