• August 10, 2025
  • NewsEditor
  • 0

டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார்.

கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் 150 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தரளி கிராமத்தை சேர்ந்த சுபம் நெகி (32) அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். அவரது ஓட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. அவரையும் காணவில்லை. அவரது மனைவி கோமல் (28) கடந்த சில நாட்களாக கணவரை தேடி அலைகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *