
மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில், சுமார் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், தற்போது புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகிறது.