
புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிறு கட்டினர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார். இதையடுத்து, பிரம்ம குமாரிகள் அமைப்பினரும் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.