• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் தனது சேம்​பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்​திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசா​ரித்து பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்​தார். இதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக ராம​தாஸ் தரப்​பில் அறிவிக்கப்பட்​டுள்​ளது.

ராம​தாஸ், அன்​புமணிக்கு இடையே​யான கருத்து வேறு​பாடு நாளுக்​கு​நாள் அதி​கரித்து தனித்​தனி​யாக செயல்​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில் மாமல்​லபுரத்​தில் ஆக.9-ம் தேதி​யான இன்று பொதுக்​குழு கூட்​டம் நடத்த அன்​புமணி அழைப்பு விடுத்​தார். இதற்கு தடை கோரி ராம​தாஸ் ஆதரவு பொதுச் செய​லா​ள​ரான முரளிசங்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *