
சென்னை/விழுப்புரம்: ராமதாஸுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அவருடன் இருக்கும் தீயசக்திகள், குள்ளநரி கூட்டம் தடுக்கிறது என பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள்அடுத்த ஓராண்டுக்கு அந்த பொறுப்புகளில் அப்படியே தொடர்வார்கள். மீண்டும் பாமகவின் உட்கட்சி தேர்தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அரங்கில் கூடியிருந்த 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.