• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை/விழுப்புரம்: ​ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ஆனால், அவருடன் இருக்​கும் தீயசக்​தி​கள், குள்​ளநரி கூட்​டம் தடுக்​கிறது என பாமக பொதுக்​குழு​வில் அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

பாமக பொதுக்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்ட நிர்​வாகி​கள்அடுத்த ஓராண்​டுக்கு அந்த பொறுப்​பு​களில் அப்​படியே தொடர்​வார்​கள். மீண்​டும் பாமக​வின் உட்​கட்சி தேர்​தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்​தப்​படும் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த தீர்​மானத்தை அரங்​கில் கூடி​யிருந்த 2,500 பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கைதட்டி வரவேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *