
பல்லாவரம்: இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை முதல்வர் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளேன். கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.