
சேலம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் முழுவதும் சாலை, தடுப்பணைகள் மற்றும் பல்வறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது சேலத்தில் நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவுத் தொழில் வளர்ச்சிக்கு உதவுவோம்.