
திண்டுக்கல்: பழங்குடியினரின் மொழி, பண்பாடுகளைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 2 நாட்கள் நடைபெறும் உலக பழங்குடியினர் தின விழாவை ஆதிதிராவிடர்நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் வரவேற்றார். பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் அண்ணாதுரை, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழநிஎம்எல்ஏ செந்தில்குமார், மாநில பழங்குடியினர் நல வாரியத் தலைவர் கனிமொழி முன்னிலை வகித்தனர்.