
ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மலைப்பகுதி பெண்களை சென்றடையாத நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தைப் பின்பற்றி, ஈரோடு மலைக் கிராமங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளில், பெண்கள் கட்டண மில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் (விடியல் பயணம்) மூலம், ரோஸ் வண்ணம் பூசப்பட்ட அரசு நகரப் பேருந்துகளில், பெண்கள் கட்டணமின்றி (இலவசமாக) பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.